பிக் பாஸ் 8: அவங்க லக்கி தம்பி.. ரஞ்சித் சொன்ன வார்த்தையால் கண்ணீர் வடிக்கத் தொடங்கிய அருண் பிரசாத்..

By Ajith V

Published:

பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டால் நிச்சயமாக குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரையும் பிரிந்து இருக்கும்போது ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அவர்களை நினைத்து அதிக அளவில் சோகம் ஏற்படும். இன்னொரு பக்கம் போட்டியாளர்களுக்கு மத்தியில் விறுவிறுப்பான டாஸ்க் என ஈடுபட்டாலும் கூட எப்போதாவது அவர்களின் நினைப்பு வந்து கண்ணீரை வரவழைத்து விட்டு செல்லும்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகரும் போட்டியாளருமான அருண் பிரசாத் தனது பெற்றோரை நினைத்து ரஞ்சித்திம் கண்ணீர் வடித்த சம்பவம் தற்போது பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது. தமிழில் எட்டாவது பிக் பாஸ் சீசன் ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் அதன் பின்னர் மெல்ல மெல்ல அதன் மீதான விறுவிறுப்பு ரசிகர்கள் மத்தியில் குறைத் தொடங்கியது.

ஆனாலும் அவ்வப்போது டாஸ்க், போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் சண்டைகள் உள்ளிட்ட விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தையும் பெற தவறுவதில்லை. பேட்மேன் ரவீந்தர் மற்றும் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் பிராங்க் என்ற பெயரில் சண்டை போட்டு வீட்டில் இருந்த அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜாக்குலின், ஜெஃப்ரி உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்களுக்கு எதிரான கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் பலமாக இருந்து வருகிறது. இப்படி இந்த சீசனின் போட்டியாளர்கள் பற்றி பேசுவதற்கும் நிறைய விஷயங்கள் உள்ளது. இதனிடையே சமீபத்தில் நடந்த ஒரு டாஸ்க்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விவாதம் செய்வது போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் தனது தந்தை குறித்து அருண் பிரசாத் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அப்போதே அவர் சற்று மோஷனலா பேசியதை அனைவரும் உணர்ந்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து ரஞ்சித் மற்றும் அருண் பிரசாத் ஆகிய இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ‘நல்ல அப்பா, அம்மா சார்‘ என அருண் பிரசாத் கலக்கத்துடன் கூறுகிறார்.

அந்த சமயத்தில் ரஞ்சிதோ, ‘அவங்களுக்கு உன்னை மாதிரி ஒரு மகன் கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்’ எனக்கூறி தேற்றுகிறார். இந்த நேரத்தில் உடனடியாக அருண் பிரசாத்தும் கண்ணீர் வடிக்க தொடங்க, ரஞ்சித் அவர் அருகே சென்று ஆறுதல் வார்த்தைகளை கூறுகிறார்.

‘இதைவிட உனது அப்பா அம்மாக்கு வேற என்ன வேணும். நீ கண்ணீர் விடுவது டிவில பாத்தாங்கன்னா அவங்களும் அழுதுருவாங்க’ என ரஞ்சித் தேற்றிக் கொண்டே இருக்க, பார்ப்பவர்கள் பலருக்கும் கூட ஒரு வித எமோஷனல் ஒட்டிக்கொண்டு விடுகிறது.