பிக்பாஸ் 8: என்னை ரவுடிகிட்ட கூட்டிட்டு போக முடியுமா.. வம்பிழுத்த ஜாக்குலின்.. ஒரே வார்த்தையில் கதையை முடித்த விஜய் சேதுபதி..

By Ajith V

Published:

Bigg Boss Jacqueline: தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதன் முதல் நாள் முடிவுக்கு வந்ததே மிகப்பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. பிக் பாஸை பொறுத்தவரையில் எலிமினேஷன் என்பது ஒவ்வொரு வார இறுதியில் அனைத்து போட்டியாளர்களையும் பற்றி கொஞ்சம் தெரிந்த பின்னர் ஒருவரே தேர்வு செய்வதாகும்.

கொஞ்ச நாள் பழகினால் தான் யார் அதில் பிடித்தமாவர்களாக இருக்கிறார், யார் செட்டாகாமல் இருக்கிறார்கள் என சக போட்டியாளர்களால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்திலேயே முதல் எலிமினேஷன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது, உள்ளே இருந்த அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

எலிமினேஷனுக்காக நாமினேட் செய்ய வேண்டும் என்றால் எப்படி 24 மணி நேரத்தில் ஒருவரை தெரிந்து கொண்டு ர்களின் பெயரை நாம் கூற முடியும் என்று உள்ளே இருந்த அனைவருமே பரபரத்து போயினர். ஆனாலும் விதிகள் என வரும் போது அதன் கீழ் விளையாட வேண்டும் என்பதால், மகாராஜா படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாச்னா எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வர் விரைவில் வைல்டு கார்டு அடிப்படையில் வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், ஏன் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் வைக்க வேண்டும் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இதில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் என்ற பெயரில் புதிய செக்மெண்ட்களும் இருப்பதால் நிச்சயம் இந்த முறை அதிக சர்ச்சை சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

மொத்தம் 18 பேர் இதில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ள நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளினி ஜாக்குலின் கடைசி ஆளாக உள்ளே என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் அவர் நடித்த நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா சொல்லும் ‘என்னை ஒரு பெரிய ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா?’ என்ற வசனத்தை பேசினார்.

அந்த நேரத்தில் இது வேடிக்கையாக அமைந்திருந்தாலும் விஜய் சேதுபதி அடுத்து தெரிவித்த பதில் அங்கிருந்து அனைவரது மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தது. “உள்ள 17 ரவுடிங்க இருக்காங்க” என பிக் பாஸ் வீட்டை குறிப்பிட்டு 18 வது போட்டியாளரான ஜாக்குலினிடம் அவர் அப்படி கூறியதும் அரங்கத்தில் இருந்த அனைவருமே சிரிக்க தொடங்கிவிட்டனர்.

பிரபலமாக நாம் பார்க்கும் ஒருவர் நல்லவராக தோன்றினாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் வாழ்ந்து வரும் போதுதான் அவர்களது குணம் என்ன என்பது தெரிய முடியும். இதைத்தான் வேடிக்கையாக விஜய் சேதுபதி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.