என்னா டேஸ்ட்டு.. பிரபல இனிப்பு கடையில் வசதியா அமர்ந்து ஸ்வீட் சாப்பிட்ட எலி.. கண்டுகொள்ளாத ஊழியர்கள்.. சர்ச்சை வீடியோ..

By Ajith V

Published:

இன்று சமூக வலைத்தளங்களின் பயன்பாடு காரணமாக நாள்தோறும் வைரலாகும் வீடியோக்களுக்கு கணக்கே கிடையாது. வீட்டில் நடைபெறும் சாதாரண, வேடிக்கையான விஷயங்களைக் கூட வீடியோக்களாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டுமென பலரும் நினைக்கிறார்கள்.

இதில் சில நிகழ்வுகள் மக்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றாலும் இன்னொரு பக்கம் சர்ச்சையான சம்பவங்களும் கூட அரங்கேறும். அந்த வகையில் உணவகங்கள் அல்லது தின்பண்டங்கள் விற்கும் இடத்தில் பார்ப்பவர்களை பதற வைக்கக்கூடிய சம்பவங்களும் நிறைய அரங்கேறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

வாங்கும் பணத்திற்கு மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை கொடுக்க முடியாமல் பல உணவகங்களும் முறைகேடில் தான் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக நிறைய இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு டைகளுக்கு சீல் வைக்கும் சம்பவங்களும் சமீப காலமாக நிறைந்து நிறைய நடந்து வருகிறது.

அப்படி இருந்தும் கூட யாரும் மக்களின் நலனுக்காக சரியான முறையில் உணவுகளை தயாரிக்காமல் பணத்திற்காக தவறான விஷயங்களில் ஈடுபட்டு காலாவதியான பொருட்களையும் தெரிந்து வைத்து கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இதில் சில விஷயங்கள் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் கவக் குறைவால் உணவு விஷயத்தில் நிறைய மோசடிகளும் நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் உள்ள பிரபல அகர்வால் ஸ்வீட்ஸ் கடையில் இனிப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் எலி ஒன்று இருந்து உண்டு கொண்டிருந்தது அங்கு வந்த அனைவருக்கும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் பஜன்புரா என்னும் பகுதியில் அகர்வால் ஸ்வீட்ஸ் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கே நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து வித விதமான பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் தான் அங்கு வைக்கப்பட்டிருந்த இனிப்புக்கு நடுவே ஒரு எலி அமர்ந்து கொண்டு அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை வாடிக்கையாளர் கவனித்து வீடியோவாக எடுத்துள்ளார். அது அங்கே இருப்பதை வேலை செய்பவர்கள் யாருமே பெரிதாக கண்டுகொள்ளாமல் குவிந்து நிற்கும் பல வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான இனிப்பு வகைகளை கொடுத்து வருவதும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தனை மக்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வளவு கவனக்குறைவாக ஸ்வீட் கடையில் பணிபுரிபவர் நடந்து கொள்ள வேண்டுமா என பலரும் கேள்வி எழுப்பிவ ருவதுடன் இந்த சம்பவம் தற்போது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் ஒரு இனிப்பு கடையில் வாடிக்கையாளர் வாங்கிய சமோசாவிற்குள் தவளையின் கால் இருந்தது பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருந்தது.

தற்போதும் அதே போன்று ஒரு சம்பவம் அதுவும் இந்தியாவின் தலைநகரத்தில் நடந்துள்ளதால் நிச்சயம் நடவடிக்கை எடுத்து அங்கிருந்த ஊழியர்களுக்கு தகுந்த எச்சரிக்கையை கொடுக்க வேண்டுமென பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.