ஆடி அமாவாசை அன்று செய்யக் கூடாத விஷயங்கள் இம்புட்டு இருக்கா… கவனமா இருங்க பெண்களே..!

By Sankar Velu

Published:

அட… ஆடி அமாவாசை தானே… அது என்ன செய்யும்னு இஷ்டத்திற்கும் சிலர் செய்யக்கூடாத விஷயங்களை அவர்களே அறியாமல் செய்து விடுவர். ஆனால் அவஸ்தை வரும்போது புலம்புவர். இது இது செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்வது தான் மிக மிகத் தவறு. அதனால் இப்போது படிக்கும்போதே மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்.

காலம் காலமாக இதையே பின்பற்றுங்கள். ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியதைக் கண்டிப்பாக செய்யுங்கள். செய்யக்கூடாததைக் கட்டாயமாக விலக்குங்கள். இங்கு தரப்பட்டு இருக்கும் விஷயங்களைப் படித்தாலே உங்களுக்குத் தெரியும். எது எது செய்யணும்.

எது எது செய்யக்கூடாதுன்னு. முக்கியமாக ஆண்களாக இருந்தால் தாய், தந்தையரில் யாராவது ஒருவர் இல்லை என்றாலும், இருவரும் இல்லை என்றாலும் திதி கொடுக்க மறந்துடாதீங்க. பெண்களாக இருந்தால் பல விஷயங்கள் செய்யக்கூடாது. எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள். வாங்க என்னன்னு பார்ப்போம்.

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை (இன்று) வருகிறது.

பின்வரும் விஷயங்களைக் கண்டிப்பாக மறந்தும் கூட செய்து விடாதீர்கள்… என்னென்ன இருக்குன்னு பார்க்கலாமா…

ஆடி அமாவாசை அன்று நீங்கள் பிறரிடம் கடன் வாங்கவும் கூடாது, நீங்கள் பிறருக்கு கொடுக்கவும் கூடாது. பணம் மட்டுமின்றி வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது.

Kolam
Kolam

ஆடி முதல் அமாவாசை அன்று வாசலிலும் பூஜை அறைகளிலும் கோலம் போடக் கூடாது. வாசலில் தண்ணீர் மட்டும் தெளித்து பெருக்கி விட வேண்டும். மறந்தும் கூட வாசலில் கோலம் போடக்கூடாது.

ஆடி அமாவசை அன்று, நீங்கள் உங்கள் முன்னோர்களை வணங்கி படையல் வைக்காமல் இருந்தாலும், கட்டாயமாக காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எச்சில் படாமல் வைக்க வேண்டும்.

அமாவாசை அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது. அமாவாசை அன்று வீட்டில் அசைவ உணவுகளை சமைக்கவும் கூடாது. உண்ணவும் கூடாது. ஏனென்றால், முன்னோர்களை வழிபாடும் நாளான அமாவாசை அன்று அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று, காலையில் வீட்டையோ, சமையல் அறையையே அல்லது பூஜை அறையையோ சுத்தம் செய்யக் கூடாது. காலையில் நீண்ட நேரம் தூங்க கூடாது.

முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது.

காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது. முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.

பெண்கள் தலைவிரி கோலத்துடன் இருக்க கூடாது. நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது. பெண்கள் குளித்து விட்டு தான் சமைக்க தொடங்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து தான் சமைக்க வேண்டும். விளக்கேற்றவும் வேண்டும். இதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு நினைக்காம இஷ்டப்பட்டு செய்யுங்க. எல்லாமே உங்கள் கைவசமாகும்.