பாழடைந்த பள்ளிக்குள் நுழைந்த குழு.. பூட்டிய அறைக்குள் நடந்த அமானுஷ்யம்.. எல்லாரும் அரண்டு போய்ட்டாங்க..

By Ajith V

Published:

இன்றைய காலத்தில் பேய்கள் மற்றும் மர்மமான கதைகள் வெளிவரும் போது அவைகள் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தையும், சுவாரஸ்யத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும். அதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டோ அல்லது படித்தோ தெரிந்து கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் ஒருவித சுவாரஸ்யம் இருக்கும். அது உண்மையா, பொய்யா என்பதை தாண்டி அந்த கதையில் உள்ள விஷயங்களை தான் அனைவரும் எதிர்பார்த்து கேட்கின்றனர்.

இதே போல பாழடைந்த பங்களாக்கள், பேய் இருப்பதாக கூறப்படும் இடங்களுக்கு சென்று பலரும் நிறைய சவாலான விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதில் விபரீதமாக ஏதாவது விஷயங்கள் நடைபெறுவதை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில், சமீபத்தில் பேய் இருக்கும் இடத்திற்கு குழுவாக செல்லும் சிலர், பாழடைந்து மர்மமாக இருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்ற போது அவர்கள் உணர்ந்த விஷயம், செய்திகளை கேள்விப்படும் பலரையும் கூட பயப்பட வைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த டானி பெர்குசன் என்ற நபர் ஒருவர் அமானுஷ்யமாக இருக்கும் விஷயங்களை தேடிச் செல்வதை பழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தனது நண்பர்களான பேவ் பெர்குசன், சுயூ ராபின்சன், ஆடம் கிளார்க் மற்றும் பால் சிசல் ஆகியோருடன் சேர்ந்து ஜார்ஜ் ஜார்விஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார். இந்த பள்ளி நீண்ட காலமாக பாழடைந்து போயுள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கே பேய்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

கடந்த 1862 ஆம் ஆண்டு இந்த பள்ளி திறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு மூடப்பட்டு விட்டது. மேலும் இங்கே அமானுஷ்யமாக நிறைய விஷயங்கள் நடந்ததை அறிந்து கொண்ட டானி மற்றும் குழுவினர், பின் வரலாறு எதையும் தெரிந்து கொள்ளாமல் அங்கே செல்ல வேண்டுமென முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த பள்ளிக்கு அவர்கள் நுழைந்த பின்னர் குழந்தைகள் சப்தங்கள் கேட்டதை உணர்ந்துள்ளனர். அதே போல, பூட்டிக் கிடந்த அறைக்குள் நிறைய காலடி சத்தங்களையும் அந்த பள்ளிக்குள் அவர்கள் கேட்ட திகில் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தவிர விசித்திரமான சில சத்தங்களையும் அவர்கள் கேட்க, அது எங்கே இருந்து வந்தது என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஆரம்பத்தில் டானி பெர்குசன் உள்ளிட்ட அனைவரும் பள்ளிக்குள் சென்ற போது எதுவும் பெரிதாக இங்கே தெரிந்து கொள்ள முடியாது என்று தான் நினைத்துள்ளனர். ஆனால், அங்கே அவர்கள் உணர்ந்த மர்மமான விஷயங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சிலர் மட்டுமே இந்த விசித்திரமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டாலும் இது உண்மையாக இருக்காது என்றும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுவதற்காக இப்படி வேண்டுமென்றே கதைகளை சொல்லி இருக்கலாம் என்று பேய் மீது நம்பிக்கை இல்லாமல் தெரிவித்து வருகின்றனர்.