ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23

பாடல் கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்..திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!…


b5b5b7f6effae13d8478d3afcc930d86

பாடல்

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்..
திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக!

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன