அருண் விஜயுடன் கைகோர்க்கும் மிஷ்கின்!!

இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். வித்தியாசமான கதைக்களத்தால் தன் படத்தினை எளிதில் ஹிட் ஆக்கும் இயக்குனராக அவர் வலம் வருகிறார். இரண்டாவது…

இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். வித்தியாசமான கதைக்களத்தால் தன் படத்தினை எளிதில் ஹிட் ஆக்கும் இயக்குனராக அவர் வலம் வருகிறார்.

இரண்டாவது படமான அஞ்சாதே மிகப் பெரிய மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அப்படத்திற்காக பல விருதுகளையும் வென்று குவித்தார். இவரது நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, பிசாசு போன்ற படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தன.

a595e041eb4b30163fdb2089213793f7-1

இவரது துப்பறிவாளன் படம் மிகப் பெரும் வெற்றி அடைந்ததையடுத்து துப்பறிவாளன் 2 வினை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பாதி வேலை முடிவடைந்த நிலையில், விஷாலுடன் பிரச்சனை ஏற்பட படத்திலிருந்து மிஷ்கின் விலகினார்.

அதன்பின்னர் இவரது சைக்கோ படம் ரிலீஸ் ஆகி சாதனை படைக்கையில், இவர் அடுத்த படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அது தற்போது உறுதியாகியுள்ளது.

மிஷ்கின் அடுத்த படத்தில் அருண்விஜயை வைத்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதுவும் மிஷ்கினின் த்ரில்லர் பாணியில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன