அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், அரசின் வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன்களால் தாங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்துப் பேச ஒரு கூட்டம் நடத்தினர். விவசாயம் செய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், லாபம் ஈட்டுவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அர்கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஸ்காட் பிரவுன், இந்த பிரச்சனைகள் குறித்துப் பேசுகையில், “அரசாங்கத்தின் வரிவிதிப்பு கொள்கைகள், ‘ஒரு புயலின் மீதுள்ள ஐஸ்கிரீம்’ போல, எங்களது நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
டிரம்பின் முதல் வர்த்தகப் போரின் போது, அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் இறக்குமதி செய்வதை சீனா நிறுத்தியது. கடந்த ஆண்டு சீனாவுக்கு $12 பில்லியன் மதிப்புள்ள சோயாபீன்ஸ் ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டு அது பூஜ்ஜியமாக குறைந்துவிட்டது. அமெரிக்காவை விட்டுவிட்டு, சீனா இப்போது பிரேசில் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து சோயாபீன்ஸ் வாங்க தொடங்கியுள்ளது.
உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் சோயாபீன்ஸ் ஏற்றுமதி செய்தாலும், சீனாவுக்கான சந்தையில் நாம் இழந்ததை ஈடுசெய்ய முடியாது” என்று ஸ்காட் பிரவுன் கூறினார்.
ஒரு புஷல் சோயாபீன்ஸ் பயிரிட $12.03 செலவாகும் நிலையில், அதன் விற்பனை விலை $10.28 மட்டுமே. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. இதற்கு முன்பு, டிரம்ப் நிர்வாகம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியது. ஆனால், இந்த முறை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு $150 முதல் $200 வரை இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று ஸ்காட் பிரவுன் குறிப்பிட்டார்.
பாரம்பரியமாக, அமெரிக்க விவசாயிகள் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாகவும், டிரம்ப்புக்கு வாக்களிப்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால், இப்போது நிலைமை மாற தொடங்கியுள்ளது. சிலர் இன்னும் டிரம்ப்பை நம்புவதாக கூறினாலும், பலர் அவரது கொள்கைகளால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக உணர்கின்றனர்.
இந்த வர்த்தகப் போரின் தாக்கம், அமெரிக்காவின் விவசாய துறையில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது விவசாயிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கக்கூடும்.
சில அரசியல் ஆய்வாளர்கள், டிரம்ப் நோபல் பரிசு பெறுவதற்காக, மற்ற நாடுகளை பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த முயற்சியின் விளைவாக, உள்நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் கொள்கைகளால், லாபம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் விவசாயிகள், தங்கள் கடன்களை அடைக்கவும், எதிர்கால விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வர்த்தகப் போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால், அமெரிக்க விவசாயிகளின் உள்நாட்டில் ஒரு புரட்சி போரை தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
