மனைவியின் பிகினி உடைக்காக 418 கோடி செலவழித்த துபாய் கோடீஸ்வரர்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

By John A

Published:

மனைவி மேல் காதல் இருக்கலாம். ஆனால் இந்த அளவிற்கு காதல் இருக்கக் கூடாது. அவரது அன்பின் உச்சகட்டமாக 418 கோடி செலவழித்து மனைவிக்கு ஆசையாகயும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்பதற்காக தனித் தீவு ஒன்றை வாங்கித் தந்திருக்கிறார் துபாய் கோடீஸ்வரர்.

துபாயைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஜமால் அல் நாடக் என்பவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவரின் மனைவி சௌடி அல் நாடக் இங்கிலாந்தில் பிறந்தவர். இருவரும் துபாயில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் போது காதலித்துள்ளனர். இவர்களது காதல் பின் திருமணமாக கைகூடியுள்ளது. மேலும் சௌடி அல் நாடக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறார்.

அடேங்கப்பா, இப்படி ஒரு டெடிகேஷனா.. பலரையும் சபாஷ் போட வைத்த உணவு டெலிவரி ஊழியர்.. குவியும் பாராட்டு

மேலும் தனது கணவர் தரும் ஆடம்பர அன்புப் பரிசுகளையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சௌடி அல் நாடக் தனியாக, பாதுகாப்பாக உணரும் வகையில் ஜமால் அல் நாடக் சுமார் ரூ. 418 கோடி மதிப்பில் ஆசியாக் கண்டத்தில் தீவு ஒன்றை வாங்கியிருக்கிறார்.

அந்த தீவில் வீடியோ ஒன்றை எடுத்துப் பதிவிட்டு அதில் நீங்கள் பிகினி உடை அணிய ஆசைப்படுகிறீர்களா? ஆம் என்றால் இப்பொழுதே உங்கள் கோடீஸ்வர கணவரிடம் கூறி தனித் தீவு ஒன்றை வாங்குங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். காதல் மனைவிக்காக ஷாஜஹான் தாஜ்மகால் கட்டினார் என்றால் இங்கு ஒருவர் ஒரு தனித்தீவையே வாங்கி பல பெண்கள் வயிற்றெறிச்சலை வாங்கிக் கட்டியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.