திடீர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடையும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் பிரமுகர்கள்.. நேற்று மரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன்.. யார் கொன்னாங்கன்னே தெரியாமல் நடக்கும் மர்மங்கள்.. இனி நேரடி போர் எல்லாம் தேவையில்லை.. உள்ளுக்குள்ள புகுந்து முக்கியமானவங்கள தூக்கிட்டாலே போதும், தீவிரவாதம் ஒழிஞ்சிரும்.. இந்தியான்னா என்னன்னு நினைச்ச?

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனுமான மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்த பயங்கரவாத அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், மரணத்திற்கான உண்மையான…

azar

இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனுமான மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்த பயங்கரவாத அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் உஸ்மான் வாலியில் நேற்று இரவு இவரது இறுதி சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மசூத் அசாரின் நிழலாகவும், அந்த அமைப்பின் மிக முக்கியமான செயல்பாட்டாளராகவும் நீண்டகாலம் இருந்து வந்த தாஹிர் அன்வாரின் திடீர் மறைவு, அந்த அமைப்பிற்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தாஹிர் அன்வாரின் மரணத்தில் நிலவும் மர்மம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்ததா அல்லது விபத்து ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ சேனல்களில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. பொதுவாக இத்தகைய உயர்மட்ட தலைவர்கள் உயிரிழக்கும்போது அது வீர மரணம் அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்ததாக சித்தரிக்கப்படும். ஆனால், தாஹிர் அன்வார் விஷயத்தில் நிலவும் மௌனம், இது ஏதேனும் திட்டமிடப்பட்ட தாக்குதலாகவோ அல்லது உள்முக மோதலின் விளைவாகவோ இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவிற்கு எதிராக நடத்திய பல கொடூரமான தாக்குதல்களில் தாஹிர் அன்வாருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016-ல் நடைபெற்ற ப பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல், 19 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்த உரி தாக்குதல் மற்றும் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான 2019 புல்வாமா தாக்குதல் என இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் பல நாசவேலைகளில் இந்த அமைப்பு மூளையாக செயல்பட்டுள்ளது. எனவே, அதன் தலைமை பொறுப்பில் இருந்த ஒருவரின் மரணம் என்பது இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. பகவல்பூரில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில், மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர். பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்த தளபதி ஒருவர், அசாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை முதல்முறையாக மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்தியாவின் அந்த வான்வழி தாக்குதலில் மசூத் அசாரின் சகோதரி, அவரது கணவர், மருமகன், மருமகள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட உறவினர்கள் உயிரிழந்தனர். மேலும் அசாரின் பல முக்கிய உதவியாளர்களும் அந்த தாக்குதலில் பலியானதால், பகவல்பூரில் இருந்த பயங்கரவாத கட்டுமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே தனது குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொன்றாக இழந்து வரும் மசூத் அசாருக்கு, இப்போது தனது சகோதரர் தாஹிர் அன்வாரின் மரணம் மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது. இது அந்த பயங்கரவாத அமைப்பின் உள்முக கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தாஹிர் அன்வாரின் மறைவு என்பது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும். பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுவதும் அல்லது உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தாஹிர் அன்வாரின் மரணத்திற்கான உண்மையான காரணம் விரைவில் வெளிவரக்கூடும் என்றாலும், இந்தியாவிற்கு எதிராக செயல்படும் சக்திகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சமரசமற்ற நிலைப்பாடும், எல்லை தாண்டிய துல்லியமான தாக்குதல்களும் இத்தகைய பயங்கரவாத அமைப்புகளை நிலைகுலைய செய்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை.