அப்போது, அவர் ஒரு புத்தக பதிப்பாளரை திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தபோதும், கணவருடன் சரியான புரிதல் இல்லை. தொழிலில் மேலும் வளர வேண்டும் என்றால், திருமண பந்தத்தை முற்றிலும் முறிக்க வேண்டும் என்று முடிவு செய்து, விவாகரத்து பெற்றார்.
விவாகரத்துக்குப் பிறகு, ஸ்டூவர்ட் என்பவரை சந்தித்தார். அவரும் விவாகரத்து பெற்றவராக இருந்தார். முதலில் தொழிலில் கூட்டாளிகளாக இணைந்த அவர்கள், ஒரு கட்டத்தில், வாழ்க்கை பார்ட்னராக இணைந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்து திருமணம் செய்துகொண்டனர்.
அந்த நேரத்தில், ஸ்டூவர்ட் மாதுளை, திராட்சை, எலுமிச்சை மற்றும் அவற்றைச் சார்ந்த பழச்சாறுகளை தயாரித்து, அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார். அந்த வியாபாரத்திற்கான விளம்பர முயற்சிகளை லிண்டா மேற்கொண்டார். இருவரும் இணைந்து சில நிறுவனங்களையும் வாங்கினர். அதன் பிறகு, அவர்களின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் முன்னேறியது.
இப்போது, அவர்களது நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.1,10,000 கோடி. அதில் சம பங்கு வைத்திருப்பதால், லிண்டாவின் சொத்து மட்டும் ரூ.55,000 கோடி. தனது பணத்தை அவர் தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், ஏராளமான சமூக நலத்திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.
விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறி, வித்தியாசமாக சிந்தித்து வெற்றி கண்ட லிண்டா, இன்று குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.