Tnpsc group 1 தேர்வர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்த உறவு முறை கேள்வி

By Keerthana

Published:

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு உறவு முறை தொடர்பான கேள்வி ஒன்று நேற்றைய தேர்வில் இடம் பெற்றிருந்தது. அந்த கேள்வி பற்றி பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4, போன்ற தேர்கள் மூலமே அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் (வகை-I), உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவற்றில் 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

குரூப் 1 காலியிடங்கள் : 90
துணை ஆட்சியர் 16
துணைக் கண்காணிப்பாளர் (வகை-I) 23
உதவி ஆணையர் (வணிக வரி) 14
கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 21
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14
தமிழ்நாடு பொதுப் பணியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 01
மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) 01

TNPSC குரூப் 1 பணியிடங்களான மேற்கண்ட பணியிடங்களுக்கு TNPSC குரூப் 1 பிரிலிம்ஸ் தேர்வு ஜூலை 13ம் தேதி நடந்தது.. இந்த முதல்நிலைத் தேர்வு ஆப்ஜெக்டிவ் வகை முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 38,247 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 37,891 மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 60,340 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். 77,907 பேர் தேர்வுக்கு வரவில்லை.

இந்த தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 175 வினாக்களும், கணிதம் மற்றும் நுண்ணறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்று இருந்தது. தேர்வில், நடப்பு நிகழ்வுகள், மத்திய- மாநில அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் அதிக எண்ணிக்கையில் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ஒருவரி வினாக்கள் மிகக்குறைவாகவே இடம்பெற்றன. பெரும்பாலான கேள்விகள் ஆராய்ந்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. அதனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக தேர்வகள் கூறினார்கள். சிவில் சர்வீஸ் தேர்வு புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாக சொல்கிறார்கள். இதில் உறவு முறை தொடர்பான ஒரு கேள்வி மிகவும் சிக்கலாக இருந்ததாக தேர்வர்கள் கூறினார்கள். அந்த கேள்வி பற்றி பார்ப்போம்.

கேள்வி: அதன்படி, P. Q. R. S. Tand U are six mombers in a family in which there are two married couples, 7 a teaches in married to a doctor who is mother of R and U. the lawyer is married to P. P has one son and one grand son Of the two married ladies one is a housewife. There is also one student and one male engineer in the family. Who among the following is the housewife?

(A) P
C) S
(E) Answer not known
(B) Q
(D) T

P, Q. R, S, T’ மற்றும் U ஆகியோர் ஒரு குடும்பத்தில் உறுப்பினர்கள். அவர்களில் இரண்டு திருமணமான தம்பதியர் உள்ளனர். 7′ என்பவர் ஒரு ஆசிரியர் மற்றும் அவர் R மற்றும் U- தாயாரான மருத்துவரை மணந்து கொண்டுள்ளார். அந்த வழக்கறிஞர் ஒரு சட்ட வல்லுநர், மேலும் அவர் Pஜ மணந்து கொண்டுள்ளார். P என்பவருக்கு மற்றும் ஒரு பேரன் உள்ளனர் இரு திருமணமான பெண்களில் ஒருவர் வீட்டில் இருப்பவர் மற்றும் அந்த குடும்பத்தில் ஒரு ஆண் பொறியாளர் மற்றும் ஒரு மாணவர் உள்ளனர். எனில் கீழ்க்கண்டவர்களில் யார் வீட்டில் இருக்கும் பெண்?

(A) P
(B) Q
(C) S
(D) T
(E) விடை தெரியவில்லை

பதில்: (A) P

Tags: group 1, tnpsc