லட்டு மாதிரி வெளியான அறிவிப்பு.. பட்டா சிட்டா ஆவணங்களை எங்கிருந்தும் எந்நேரத்திலும் பெறுவது எப்படி?

சென்னை: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிசிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை பெறலாம் என…

How to get Patta Chitta documents in Tamilnadu anywhere anytime? patta chitta online

சென்னை: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிசிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை பெறலாம் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்தின் இயக்குனர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நிலம் வைத்துள்ளவர்கள் பயனடையும் வகையில் கீழ்க் காணும் இணைய வழிச் சேவைகள் நிலஅளவை மற்றும் நில வரித் திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கின்றன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.

இதேபோல் எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிசிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப் பட்டியல் போன்றவற்றை பொதுமக்கள் https://tnlandsurvey.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்” இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.