தேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12

பாடல் செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. விளக்கம்.. செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின்…

04600832d48e47179a8bce3e3f1191fd

பாடல்

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

விளக்கம்..

செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன