பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5

பாடல் ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும்…


da26a348845e2720e9f354e49e2cf53a

பாடல்

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

விளக்கம்..

ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1001

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன