திருவுள்ளம் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் தனதன்நற் றோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனேகனகநற் றூணே கற்பகக் கொழுந்தேகண்கள்மூன் றுடையதோர் கரும்பேஅனகனே குமர விநாயக சனகஅம்பலத் தமரர்சே கரனேநுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்தொண்டனேன் நுகருமா விளக்கம்.. குபேரனுடைய நண்பனே! எல்லா…


00436bd63f6b4cd72df908658eb5f536

பாடல்

தனதன்நற் றோழா சங்கரா சூல
பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா

விளக்கம்..

குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனே! சூலத்தைக் கையில் ஏந்தியவனே! என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன் மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பக மரத்தின் கொழுந்தினை ஒப்பவனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் தேவர்கள் தலைவனாக உள்ளவனே! உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அடியேன் அநுபவிக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன