தமிழகத்தில் ஏப்ரல் 23, அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, விஜய் ரசிகர்களுக்கு வாக்களிக்கும் ஆர்வம் இல்லை என்றும், அவர்கள் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு வரமாட்டார்கள் என்றும் கிளப்பி விடப்படும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நாளன்று மற்ற எல்லாரையும் விட முதன் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்து, ஜனநாயக கடமையை ஆற்றுவதில் விஜய் ரசிகர்களே முன்னணியில் இருப்பார்கள் என்பதை அவர்கள் உறுதிபட கூறுகின்றனர். இது வெறும் தேர்தல் அல்ல, தங்கள் தலைவரை அரியணையில் ஏற்றும் ஒரு வரலாற்று போர் என அவர்கள் கருதுகின்றனர்.
இன்றைய இளைய தலைமுறை அரசியல் மாற்றத்தை நோக்கி மிக தீவிரமாக துடித்து கொண்டிருக்கிறது. பாரம்பரிய கட்சிகளின் மீதுள்ள அதிருப்தி, விஜய்யின் வருகையை பெரும் எதிர்பார்ப்பாக மாற்றியுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வெறித்தனமான ஆதரவு விஜய்க்கு ஒரு மாபெரும் பலமாக மாறியுள்ளது. சமீபத்திய கள ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள், இளைஞர்களின் வாக்கு வங்கியில் தவெக ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக தவெகவின் உள்கட்சி ஆய்வு முடிவுகள் அக்கட்சி 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு விகிதத்தை பெறும் என்று கணித்துள்ள நிலையில், இந்த இளைஞர் பட்டாளமே தேர்தல் களத்தில் விஜய்யின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் அரசியல் பயணம் என்பது வெறும் சினிமா கவர்ச்சியால் உருவானது மட்டுமல்ல, அது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தேவைகளை பிரதிபலிக்கும் ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது. அவரது கட்சி முன்வைக்கும் சமத்துவ கொள்கைகள் மற்றும் சமூக நல திட்டங்கள் அடித்தட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மகாபலிபுரத்தில் நடந்த மகளிர் தின விழாவில் அவர் வெளியிட்ட முதற்கட்ட வாக்குறுதிகள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் குரலாக தவெக ஒலிக்க தொடங்கியிருப்பது, பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
தனித்து போட்டியிடுவது என்ற விஜய்யின் அதிரடி முடிவு, சிறுபான்மையினர் மத்தியில் அவருக்கு பெரும் நன்மதிப்பை பெற்று தந்துள்ளதாக தெரிகிறது. எந்த ஒரு பெரிய கூட்டணியிலும் இணையாமல், சமத்துவ மற்றும் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால், சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை அவர் வென்றுள்ளார். இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளில் ஒரு கணிசமான பகுதி தவெகவிற்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மாற்றாக ஒரு தூய்மையான அரசியலை விஜய் முன்னெடுப்பதால், சிறுபான்மை வாக்குகள் தவெக பக்கம் பெரும் அளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளின்படி, தவெகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் தவெகவின் வளர்ச்சியை உற்று நோக்கி வருகின்றன. விஜய்யை தனிமைப்படுத்த நினைக்கும் கட்சிகள், உண்மையில் தங்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி கொள்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. லேட்டஸ்ட் கணிப்புகள் விஜய்யை ஒரு முக்கியமான போட்டியாளராகவும், சில தொகுதிகளில் முன்னிலை வகிப்பவராகவும் காட்டுகின்றன. 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்த மாற்றத்திற்கான தேர்தல் என்று தவெக தொண்டர்கள் நம்பிக்கையுடன் முழக்கமிடுகின்றனர்.
இறுதியாக, 2026ஆம் ஆண்டு தமிழகத்தின் அரசியல் வரைபடம் நிச்சயம் மாற்றி எழுதப்படும் என்பது மட்டும் உறுதி. 50 ஆண்டுகள் மற்றும் 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் ஒரு புதிய இயக்கம் இவ்வளவு வேகமாக வளர்ந்திருப்பது தமிழக அரசியலில் ஒரு புதுமை. விஜய்யின் அரசியல் வருகையை வெறும் சினிமா நடிகரின் வருகையாக பார்க்காமல், ஒரு தெளிவான திட்டமிடலுடன் கூடிய மக்கள் புரட்சியாகவே பலரும் கருதுகின்றனர். மக்கள் மாற்றத்தை தீர்மானித்துவிட்டனர், அந்த மாற்றத்தின் முகமாக தற்போது விஜய் உருவெடுத்துள்ளார். 2026ல் விஜய் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் அல்லது அரசியலில் ஒரு பெரும் அதிகார மையமாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு தவெக ரசிகர்களிடையே நிலவுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
