அடேய்…உங்களுக்கும் விஜய்யை பார்த்து பயம் வந்துடுச்சா? விஜய் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய இலங்கை அரசு.. விஜய் பேசிய பின் உலக அளவில் கவனம் பெற்ற கச்சத்தீவு விவகாரம்..!

நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி, அண்டை நாடான இலங்கையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என்று பேசியது, நீண்ட காலமாக…

kachatheevu vijay

நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி, அண்டை நாடான இலங்கையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என்று பேசியது, நீண்ட காலமாக நிலவிவரும் ஒரு சிக்கலான வரலாற்று பிரச்சனையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி போன்ற பல கட்சிகள் கச்சத்தீவு பற்றி பேசியிருந்தாலும், விஜய்யின் பேச்சுக்கு அந்நாட்டு அதிபரே அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் கச்சத்தீவுக்கும் நேரடியாக விசிட் அடித்துள்ளார்.

விஜய்யின் பேச்சுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அங்குள்ள விஜய்யின் ரசிகர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது:

இலங்கையில் உள்ள “தமிழக வெற்றி கழகம்” கட்சியின் கொடிகள் மற்றும் கொடிமரங்கள் புல்டோசர் மூலம் அகற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்தவர்கள் அல்லது அவரது படத்தை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் வரவிருக்கும் படமான “ஜனநாயகன்” இலங்கையில் வெளியிடப்படாமல் தடை செய்யப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை, விஜய்யின் படங்களுக்கு ஒரு பெரிய வெளிநாட்டுச் சந்தையாகும்.

கச்சத்தீவு என்பது வெறும் மணல் திட்டு அல்ல; 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலப்பகுதி, அங்கே புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. வரலாற்று ரீதியாக, இந்தத் தீவு ராமநாதபுரம் ஜமீன்தாருக்கு சொந்தமானது என்பது செப்பேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை அரசுக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்திய மீனவர்கள் 10 ஆண்டுகளுக்கு தங்களின் வலைகளை உலர்த்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் இந்த தீவை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதுவும் காலப்போக்கில் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் விஜய் திடீரென கச்சத்தீவு குறித்து ஆவேசமாக பேசினார். அவருடைய பேச்சுக்கு, ஏற்கனவே மீனவர் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“வேலாயுதம்” படப்பிடிப்பின்போது, விஜய் நாகப்பட்டினத்திற்கு சென்று மீனவர்களை சந்தித்துப் பேசினார். அவர், மீனவர்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து மத்திய அரசுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் அனுப்ப அறிவுறுத்தினார். தாக்குதல்கள் தொடர்ந்தால், தான் வீதிக்கு வந்து போராடுவேன் என்றும் எச்சரித்தார். இந்தச் செயல், மீனவர் மத்தியில் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

விஜய்யின் அரசியல் எழுச்சி

விஜய்யின் அரசியல் வருகை, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்களால் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிரான இந்த எதிர்வினைகள், அவரது அரசியல் செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருவதை காட்டுகிறது. ஏ.சி. அறையில் இருந்து மட்டும் பேசாமல் மக்களின் பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டால், 2026-ஆம் ஆண்டு தேர்தலில் அவரை அசைக்க முடியாத சக்தியாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் விஜய், கச்சத்தீவு குறித்து பேசியது தமிழ்நாடு, மத்திய அரசு மட்டுமின்றி இலங்கை அரசும் எதிர்வினையாற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடேய்…உங்களுக்கும் விஜயை பார்த்து பயம் வந்துடுச்சா ?