சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: 4 நாட்களில் வறட்சி.. இன்னொரு சோமாலியா நாடாகும் பாகிஸ்தான்..

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நீண்ட ஆண்டுகளாக இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா, நிறுத்தியது. இதையடுத்து வெளியாகியுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களில், பாகிஸ்தானின் சியால்கோட் அருகே உள்ள செனாப் நதி…

river 1

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நீண்ட ஆண்டுகளாக இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா, நிறுத்தியது. இதையடுத்து வெளியாகியுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களில், பாகிஸ்தானின் சியால்கோட் அருகே உள்ள செனாப் நதி முற்றிலும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. ஒருகாலத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியமான நீர்வழியாக இருந்த இந்த நதி, இப்போது  தண்ணீர்  இல்லாமல் உயிரற்ற நிலையாகவே காணப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, 1960ல் கையெழுத்திடப்பட்ட சிந்து நீர்வள ஒப்பந்தத்தை இந்தியா இடை நிறுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான நீர்வள பகிர்வுக்கான அமைதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகும்.

பாகிஸ்தானில் உள்ள சிந்து செனாப் மற்றும் ஜெலமும் நதிகளில் வரும் தண்ணீர் பெரும்பாலும் இந்தியா வழியாகவே நுழைகின்றன. முந்தைய ஒப்பந்தப்படி இந்தியா 20% நீரையே பயன்படுத்த முடியும், மீதமுள்ள 80% நீர் பாகிஸ்தானுக்கு  செல்லும்.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது. ஆனால், தற்போது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானின் விவசாயமும், குடிநீர் விநியோகம்  குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெரிதும் பாதிக்கப்படலாம்.

இந்த ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி உருவானது. நதிகளை பகிர்ந்துகொள்ளும் முறையை அமைத்து அதில் இந்தியாவுக்கு 30% நீர் பயன்படுத்தும் உரிமை அளிக்கப்பட்டது, பாகிஸ்தான் 70% நீரைப் பெற்றது.

இந்தியாவுக்கு பீஸ், ரவி, சத்லெஜ் ஆகிய நதிகளின் முழு உரிமையையும் பெற்றது. சிந்து , செனாப், ஜெலமும் ஆகிய நதிகள் இந்தியாவில் தொடங்கினாலும் அவை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.

செயற்கைக்கோள் புகைப்படங்களில் இருந்து பாகிஸ்தான் நதி வறண்டுபோய் இருப்பதை பார்க்கும்போது நான்கே நாட்களில் பாகிஸ்தானுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இது மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தொடர்ந்தால் பாகிஸ்தான், இன்னொரு சோமாலியாவாக மாறிவிடும் என கூறப்படுகிறது.