ஜெயம்ரவி என்னிடம் வந்தது உண்மைதான்… ஒரே போடாய் போட்ட பாடகி கெனிஷா…

By Meena

Published:

இணையத்தில் இன்றும் ஓயாமல் பேசி வரும் விவகாரம் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து விஷயம்தான். ஜெயம் ரவி விவாகரத்து அறிக்கை என்று வெளியிட்டாரோ அன்னையிலிருந்து சினிமா வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரி ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிடுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும் சர்ச்சை கிளம்பியது.

பாடகி கெனிஷா தனியாக வளர்ந்து வந்த மேடை பாடகி ஆவார். 600க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலே இவர் பாடலை பாடியிருக்கிறார். ஒரு பாட்டிற்காக இவரது பாடலை ஜெயம்ரவி பிரமோஷன் செய்தாராம். அதற்குப் பிறகு இருவரும் கோவாவில் தனியாக சந்தித்திருக்கிறார்கள் என்று தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவியே இதைப் பற்றி ஓபனாக பேசி இருப்பார். அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய பர்சனல் லைஃபை பிரைவேட்டாவே இருக்க விடுங்க. அதை மீடியாவுக்கு இழுக்காதீங்க. எனக்கும் கெனிஷாவுக்கும் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒரு தொடர்பும் கிடையாது. அவங்க ஒரு Healer மற்றும் Licensed Psyhiatrist. நானும் அவங்களும் ஃப்யூச்சர்ல ஹீலிங் சென்டர் ஆரம்பிக்கலாம்னு பிளான்ல இருந்தோம் என்று கூறியிருந்தார்.

இது நிலைமையை மேலும் தீவிரமடைய செய்தது. நேற்று மறுபடியும் ஜெயம் ரவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தனது உடைமைகளை மீட்டுத் தருமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த பிரச்சனைகளுக்கு நடுவே பாடகி கெனிஷாவும் ஒரு நேர்காணலில் இதை பற்றி பேசி இருக்கிறார்.

பாடகி கெனிஷா கூறியது என்னவென்றால், எனக்கும் ஜெயம் ரவிக்கும் இருப்பது தொழில்முறை நட்பு மட்டும்தான். நான் ஒரு ஹீலர். அதனால் ஜெயம் ரவி அவரது விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட பின்பு தான் என்னிடம் உதவியை நாடி வந்தார். அவரது வாழ்க்கை பிரச்சினைகளை ஹில் செய்வதற்காக தான் என்னிடம் வந்தாரே தவிர எங்கள் இருவருக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியிருக்கிறார் பாடகி கெனிஷா.