Skip to content
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழகம்
  • பொழுதுபோக்கு
டிசம்பர் 05, 2025
Tamil Minutes

Tamil Minutes

Tamil News online
Tamil Minutes
  • ஹோம்
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
  • வெப் ஸ்டோரி
Tamil Minutes
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை முறை
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
  • .
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
Tamil Minutes
  • செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • வாழ்க்கை முறை
  • சமையல்
  • உடல்நலம்
  • அழகுக் குறிப்புகள்
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
Home » news » atm money customor fraud
செய்திகள்

ஏடிஎம்-இல் இருந்து வந்த பணத்தை முழுவதும் எடுக்காத கஸ்டமர்.. லட்சக்கணக்கில் மோசடி..!

  ஏடிஎம் இல் வந்த பணத்தை முழுவதுமாக எடுக்காமல், லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம்மில் பணம்…

Author Avatar

Bala Siva

நவம்பர் 25, 2024, 09:259:25 காலை atmbank accountfraud
ATM

 

ஏடிஎம் இல் வந்த பணத்தை முழுவதுமாக எடுக்காமல், லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க அனைத்து வழிமுறைகளையும் செய்துவிட்டு, பணம் வந்த பின், அந்த பணத்தை முழுவதுமாக எடுக்காமல் ஒரே ஒரு நோட்டை மட்டும் விட்டுச் செல்கின்றனர். இதனை அடுத்து, ஏடிஎம் மெஷின் “பணம் வாடிக்கையாளர் எடுக்கவில்லை” என்று நினைத்து, சில நிமிடங்களில் “டைம் அவுட்” எனக் காண்பித்து, பணத்தை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

ஆனால், ஒரே ஒரு ரூபாய் நோட்டை மட்டுமே உள்ளே இழுத்தது ஏடிஎம் மெஷினுக்கு தெரியாது என்பதால், பணம் திரும்ப பெற்றதாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. வங்கி அக்கவுண்டிலும் மீண்டும் அவர்கள் எடுத்த பணம் திரும்ப வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், பணத்தை முழுவதுமாக எடுக்காமல் வங்கி மற்றும் ஏடிஎம்மை ஏமாற்றி, மர்ம நபர்கள் இருவர் மோசடி செய்துள்ளனர்.

குறிப்பிட்ட வங்கி அக்கவுண்டில் மட்டும் பணம் செலுத்திய தொகைக்கும் எடுத்த தொகைக்கும் இடையே வித்தியாசம் உள்ளதை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள், ஏடிஎம் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது இந்த மோசடியை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது, காவல்துறையினர் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Bala Siva
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

தொடர்புடைய போஸ்ட்

vijay 7

ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது மக்களின் வழக்கம்.. இந்த முறை அதிமுக, திமுக இரண்டுமே ஜெயிக்காது என மக்கள் முடிவு செய்துவிட்டார்களா? மாற்று சக்தி விஜய்யை மக்கள் ஏற்க தொடங்கிவிட்டார்களா? 75 ஆண்டு கால தமிழக அரசியலில் முதல்முறையாக திராவிட கட்சிகளுக்கு பின்னடைவா? முடிவு இளைஞர்களின் கையில் தான்..!

By Bala Siva டிசம்பர் 5, 2025, 11:36
#ट्रेंडिंग हैशटैग:atmbank accountfraud

Post navigation

Previous Previous post: Bigg Boss Tamil Season 8 Day 50: கோட்டை அழித்த பிக் பாஸ்… சிரித்துக்கொண்டே வெளியேறிய வர்ஷினி!
Next Next post: ஓய்வு பெறுவதற்கு முன் ரூ.1 கோடி சேமிப்பு: பின் ஒவ்வொரு மாதமும் ரூ.70000 வருமானம்.. எப்படி தெரியுமா?

District News

.

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Facebook
  • X
  • YouTube
  • Threads
  • Pinterest
  • LinkedIn
© Copyright All right reserved By Tamil Minutes WordPress Powered By