ஒரு ஊர் முழுவதும் இத்தனை இரட்டையர்களா? தமிழகத்தின் அதிசய ஊர்!

ஒரு ஊரில் வசிக்கும் பலருக்கும் இரட்டைக் குழந்தைகள் என்ற வியப்பிற்குரிய செய்தியினைக் கேட்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதாவது தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தினைச் சார்ந்த சீர்காழியில்தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீர்காழியில்…

Untitled 36

ஒரு ஊரில் வசிக்கும் பலருக்கும் இரட்டைக் குழந்தைகள் என்ற வியப்பிற்குரிய செய்தியினைக் கேட்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அதாவது தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தினைச் சார்ந்த சீர்காழியில்தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீர்காழியில் 80 முதல் 100 க்கும் அதிகமான இரட்டையர்கள் பிறந்து வாழ்ந்து வருகின்றனர். உலக அளவில் அதிக அளவில் இரட்டைக் குழந்தைகள் கொண்ட ஒரு இடமாக சீர்காழியே உள்ளது.

மேலும் இவர்களில் 55 இரட்டையர்கள் ஒரே பள்ளியில் படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சீர்காழியில் எவ்வாறு அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்கின்றனர் என்பது குறித்த ஆராய்ச்சியானது தொடந்து நடைபெற்று வருகின்றது.

சீர்காழியில் வசிக்கும் மக்களோ அதிக அளவிலான கோயில்களைக் கொண்ட புண்ணிய தலமாக இருப்பதால்தான் இப்படி ஒரு அதிசய சம்பவம் நடப்பதாக கருதுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன