பெரிய வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப வசதிகள், பிரமாண்ட கட்டிடங்கள், கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், என ஒரு திரைப்படத்தில் பள்ளி காட்டப்பட்டது. ஆனால் அது கற்பனை என்றாலும், இந்தியாவில் உண்மையிலேயே அப்படியான ஒரு பள்ளி இருக்கிறது.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பள்ளி பல தசாப்தங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. அதன் கட்டிடக் கலை ஒரு அரண்மனை போலவே தெரிகிறது!
முன்னணி நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் பள்ளியின் பழைய மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். அரவல்லி மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள இந்த பள்ளி அழகான இயற்கை சூழலோடு மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. இந்த பள்ளி ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மேயோ கல்லூரி.
அழகான கட்டிடத்தில் காலை எழும்போது ஒரு மயில் பறக்கும் காட்சியை காண்பது அசாதாரணம் கிடையாது. கற்சுவர்கள், பிரமாண்டமான பந்தல்கள், ரோமன்-கிரேக்க நாகரிகத்தைக் குறிக்கும் வகையில் உள்ளமைக்கப்பட்ட வசதிகள் அதே நேரத்தில் நவீனமாகவும் இந்த பள்ளி உள்ளது.
1875ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேயோ கல்லூரி இந்தியாவின் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். 1870-ல் அரச குடும்ப வாரிசுகள் அதிகம் இந்த பள்ளியில் கல்வி பயின்றனர்.
இன்று, மேயோ கல்லூரி 187 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து, ஒரு அமைதியான ஏரிக்கரையில் மலைகளை நோக்கிய நிழற்படம் போல நிற்கிறது. சர்வதேச தரத்திற்கேற்ப சவால்களை ஏற்கும் வசதிகள், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான சூழல் இங்கே உள்ளது.
பிரமாண்டமான இந்தக் கல்வி நிலையம் இப்போது எல்லா பின்னணியிலிருந்தும் மாணவர்களை வரவேற்கிறது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ஆண்டுக்கான கட்டணம் ரூ.10,53,000 ஆகும்.