மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..

Published:

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகரில் உள்ள தனது மனைவியை வைத்துச் சூதாடியிருக்கிறார் ஒருவர். இதனால் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூதுக்கு அடிமையாகி நாடு, அரசாட்சி என ஒவ்வொன்றாக இழந்து கடைசியில் தங்களது மனைவியான திரௌபதியை வைத்து சூதாடுவர். அதிலும் தோற்று திரௌபதி மானபங்கப் படுத்தப்படும் போது கண்ணன் அருளால் அவர் காப்பாற்றப்படுவார். இது நாம் மகாபாரத இதிகாசத்தில் படித்த வரலாறு.

இதனை நிஜமாக்கும் வகையில் அந்த நபர் செய்துள்ளார். சூதாட்டத்திற்கு அடிமையான அக்கணவர் தன்னிடம் இருந்த சொத்துக்கள், நிலங்கள், நகைகள் என அனைத்தையும் விற்று சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அப்படியும் திருந்தாத அவர் கடைசியில் ஒன்றும் இல்லாததால் தனது மனைவியைப் பணயம் வைத்து சூதாடியிருக்கிறார்.

டமார் என வெடித்த பிரிட்ஜ்.. அதிகாலையில் மதுரையை அதிர வைத்த சம்பவம்.. பறிபோன 2 உயிர்கள்..

இது மட்டுமன்றி தனது மனைவியை பாலியல் ரீதியாக உடன் விளையாடியவர்கள் துன்புறுத்தவும் அனுமதி கொடுத்துள்ளார். மனைவி இதனைத் தடுத்த நிலையில் அவரை கொடூர சித்ரவதையும் செய்திருக்கிறார். இதனால் அவர் காவல் துறையை நாட போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகாபாரத்தில் வரும் கற்பனைக் கதை போல் நிஜத்திலும் நடந்த இச்சம்பவம் பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடங்கிலும் ஆன்லைன் ரம்மியால் பல்வேறு இளைஞர்கள் அதற்கு அடிமையாகி அதில் பணத்தினை இழந்து நிம்மதியை இழந்து, சில வேளைகளில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...