ப்பா.. என்ன மாதிரியான துணிச்சல்.. நேராக வீட்டிற்குள் வந்த 3 கொள்ளையர்கள்.. தனியாளாக பெண் செஞ்ச விஷயம்.. வீடியோ..

By Ajith V

Published:

பல ஆண்டுகளுக்கு முன்பும் சரி தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவாகியுள்ள இந்த காலத்திலும் சரி, உலகத்தின் பல இடங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது. சிசிடிவி கேமரா உள்ளிட்ட பலர் வந்தாலும் கூட இன்னும் நிறைய பேர் துணிச்சலாக திருடியும் வருகின்றனர்.

அதையும் தாண்டி கேமராக்கள் உள்ள பகுதிகளில் எந்த அளவுக்கு திட்டம் போட்டு உள்ளே புகுந்து பொருட்களை தூக்கிச் செல்ல முடியுமோ அதையும் மிகச் சரியாக செய்து வருகின்றனர். இது போன்ற பல கொள்ளை சம்பவங்களை போலீசாரும் மிகத் துரிதமாக விசாரித்து கொள்ளையர்களை கைது செய்து தண்டனைகள் கொடுத்து வந்தாலும் தொடர்ந்து இது மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் கூட அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கூட வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில இடங்களில் கொள்ளை சம்பவங்கள் விலைமதிப்புள்ள பொருள்களுக்காக நடந்தாலும் இன்னொரு பக்கம் அங்கு இருக்கும் நபர்களையும் சிலர் கொலை செய்து பதற வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் பகுதியில் 3 கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்த சமயத்தில் அங்கிருந்த பெண் சாமர்த்தியமாக செய்த விஷயம் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இது தொடர்பாக வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகளின் படி, 3 கொள்ளையர்கள் ஒரு வீட்டில் நுழைய முயற்சி மேற்கொள்கின்றனர்.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் பெண், உடனடியாக தனியாளாய் கதவை அடைக்க முயற்சிக்கிறார். வெளியே 3 பேர் இருந்தும் அவர்களைத் தாண்டி பலமாக கதவைத் தாங்கி அடைப்பதற்கு அந்த பெண் முயற்சிக்க, போராட்டத்திற்கு பின்னர் அதற்கு விடையும் கிடைத்தது.

டனடியாக, அவர் கதவுக்கு அருகே ஒரு சோபாவை கொண்டு அடைத்து வைக்கிறார். இன்னொரு புறம், தொடர்ந்து உதவிக்காக கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டும் இருக்கிறார் அந்த பெண்மணி. இவ்வளவு துணிச்சலாக அதுவும் 3 கொள்ளையர்களை எதிர்த்து துணிச்சலாக கதவை திறக்க கூட விடாமல் அந்த பெண் செய்த செயல், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

து மட்டுமில்லாமல் வீட்டில் குழந்தைகள் இருந்து போதும் அவர்களுக்கு அரணாக இருந்து அந்த பெண் ஈடுபட்ட செயல் பற்றி தான் தற்போது இணையவாசிகள் அதிகம் பேசி வருகின்றனர். வீட்டின் துணையாக ஆண்கள் இங்கே இருந்தாலும் இது போன்ற சமயத்தில் வீட்டில் இருக்கும் போதே அதை பாதுகாப்பவர் தான் நிஜத்தில் குடும்ப தலைவி என புகழாரம் சூட்டி வருகின்றனர்.

ந்த பெண் மட்டும் துணிச்சலாக செயல்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் உள்ளே நுழைந்து ஏதாவது விபரீத சம்பவங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.