சிறுமியின் கழுத்தை வெட்டி படிக்கட்டில் ரத்த பலி கொடுத்த கொடூரன்.. மனநோயாளியா? மந்திரவாதியா?

குஜராத் மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தி, கழுத்தை வெட்டி, அதிலிருந்து வரும் ரத்தத்தை தனது வீட்டின் அருகே இருந்த கோவில் படியில் பூசிய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்…

202108111512195385 Tamil News Tamil News 35 year old man murder near iraniyal SECVPF
குஜராத் மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தி, கழுத்தை வெட்டி, அதிலிருந்து வரும் ரத்தத்தை தனது வீட்டின் அருகே இருந்த கோவில் படியில் பூசிய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, லாலா என்ற நபர் அந்த சிறுமியை கடத்தியதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, போலீசார் லாலாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையின் போது, சிறுமியை கடத்தி கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், சிறுமியின் கழுத்தில் கோடாலியால் வெட்டியதாகவும், அதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் படிக்கட்டுகளில் அர்ப்பணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர குற்றத்திற்கான நோக்கம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இது நரபலி சம்பவமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், லாலா ஒரு துர் தேவதைகளுக்காக சடங்குகளை செய்யும் நபராக இருக்கலாம், அல்லது மந்திரவாதியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவர் மனநல நோயாளியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், லாலா தற்போது கைது செய்யப்பட்டு, கொலை மற்றும் ஆட்கடத்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வயது சிறுமியின் கழுத்தை வெட்டி, ரத்த பலி கொடுத்த கொடூரனின் செயல், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.