விலையுயர்ந்த வாட்சுகள், வெள்ளி நாணயம் என தனது திருமணத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கிய ஆனந்த் அம்பானி…

By Meena

Published:

ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனத்தின் தலைவர் தான் முகேஷ் அம்பானி. ஜியோ இந்தியாவின் மிக முக்கியமான தொலைத்தொடர்பு நெட்ஒர்க் ஆக உள்ளது. முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் தான் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக உள்ளது.

ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த மார்ச் மாதம் முதலே ஆரம்பித்துவிட்டது. ப்ரீ வெட்டிங் பார்ட்டி, ஹல்தி, மெஹந்தி, முகூர்த்தம் என பலவித நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் உலகின் அனைத்து பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

பாப் பாடகி ரிஹானா, ஜஸ்டின் பைபர் போன்றோர்களும், இந்தி திரையுலகினர், தமிழ் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் என கலந்துக்கொண்ட பிரபலங்களின் எண்ணிக்கை ஏராளம்.

வெளிநாட்டில் படகில் பார்ட்டி, கோடிக்கணக்கில் வாரி இறைத்து தனது இளைய மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தினர் முகேஷ் அம்பானி. பிரதமர் மோடி, ஷாருகான், அமிதாபச்சன், ரஜினிகாந்த், தோனி என அனைவரும் திருமணத்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

அம்பானி குடும்பமும் வந்த பிரபலங்களை வெகு விமர்சையாக கவனித்தது. ஆனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு வந்த ஸ்பெஷலான நண்பர்கள், மாப்பிள்ளை தோழர்களுக்கு விலையுயர்ந்த சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்சை பரிசளித்துள்ளார். மேலும் அங்கே பணியாற்றிய ஊழியர்களுக்கு இனிப்புடன் வெள்ளி நாணயத்தையும் பரிசாக கொடுத்துள்ளனர் அம்பானி குடும்பம்.