ஒரு படத்துக்கு அது முக்கியமில்லை… உருக்கமாக பேசிய ஹரிஷ் கல்யாண்…

By Meena

Published:

ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். அவரது தந்தை கல்யாண் திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் மியூசிக் லேபிள் உரிமையாளர் இப்போது குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி படத்திற்கு பிறகு அரிது அரிது சட்டப்படி குற்றம் பொறியாளர் வில் ம்பு ஆகிய படங்களில் நடித்தார் ஹரிஷ் கல்யாண். 2017 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் wildcard போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் புகழ் அடைந்தார் ஹரிஷ் கல்யாண். அதன் மூலம் அடுத்ததாக சினிமா பட வாய்ப்பு கிடைக்கவே 2018 ஆம் ஆண்டு பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்ததாக இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், தாராள பிரபு, மனப் பெண்ணே, பார்க்கிங் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை பெற்றார் ஹரிஷ் கல்யாண். தற்போது இவர் நடிப்பில் ப்பர் ந்து திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண் உடன் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த இந்த ல்ப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அடுத்ததாக இவர் நடிப்பில் டீசல் திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது. இந்நிலையில் ப்பர் பந்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உருக்கமாக பேசியிருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், என்னுடைய இந்த ப்பர் பந்து படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் அன்பு ஆதரவு எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிகன் பட்டிருக்கிறேன். ஒரு படம் எடுத்தோம்னா அது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகணும் அப்படி எல்லாம் நான் நினைக்க மாட்டேன். அது முக்கியமில்லை. அந்த படம் மக்களிடையே போய் சேருதா ஒரு மூணு மணி நேரம் அவங்க படத்தை ரசித்து பார்க்கிறார்களா என்பதுதான் நான் நினைக்கிற விஷயம். அது மட்டுமே எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கும் என்று உருக்கமாக பேசி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.