சினிமாவில் கமலை போல் அறிவு கொண்டவர் வேற யாரும் இல்லை… ஓபனாக பேசிய ராதாரவி…

ராதாரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான குணச்சித்திர மற்றும் துணை நடிகர் ஆவார். இவரது தந்தை எம் ஆர் ராதா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராவார். மேலும் நடிகைகள் ராதிகா மற்றும்…

radharavi

ராதாரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான குணச்சித்திர மற்றும் துணை நடிகர் ஆவார். இவரது தந்தை எம் ஆர் ராதா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராவார். மேலும் நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷா இவரது சகோதரிகள் ஆவர். 1977 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராதாரவி.

தொடர்ந்து பொய்க்கால் குதிரை, மதுரவீரன், அண்ணாமலை, பூமகள் ஊர்வலம், மருது, அரண்மனை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ராதாரவி. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராதாரவி.

வயது முதிர்ந்த போதும் இன்றளவும் ஓயாமல் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார் ராதாரவி. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ராதாரவி கமல்ஹாசனை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

ராதாரவி கூறியது என்னவென்றால், கமல்ஹாசன் சாதாரண மனிதர் அல்ல. அவருக்கு இருக்கும் அறிவு மிகப்பெரியது. சினிமாவை பற்றி அவருக்கு இருக்கும் அறிவு இங்கு வேறு யாருக்குமே கிடையாது. இப்போது கூட ஏதோ AI படிக்க போறேன் என்று அமெரிக்கா சென்று படித்து வந்திருக்கிறார். அதுதான் கமல் என்று அவரைப் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் ராதாரவி.