சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர் கார்த்திக் மற்றும் இவரது மனைவி ஜோதிகா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.
1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சூர்யா.
இவரை மேலும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று இரண்டு மூன்று என்ற மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. 2015 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிதாக வணீக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இறுதியாக இவர் நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை பெற்றது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. இதில் Retro திரைப்படம் முடிவடைந்து வெளிவர தயாராக இருக்கிறது. இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யாவின் தந்தை சிவகுமார் பேசிய சில விஷயங்கள் பேசுபொருள் ஆகி இருக்கிறது.
சிவக்குமார் கூறியது என்னவென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் உடலை வருத்தி முதன்முதலாக சிக்ஸ் பேக் வைத்தது சூர்யா தான் என்று அவர் பேசியிருப்பார். இதற்கு ரசிகர்கள் சூர்யாவுக்கு முன்பே விக்ரம் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார் என்று பலதரப்பட்ட பேச்சுகள் சினிமா வட்டாரங்களில் நிலவி வருகிறது. இதை பற்றி விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் பொல்லாதவன் படத்திற்காக முதன் முதலில் தனுஷ் தான் சிக்ஸ் பேக் வைத்தார். அதற்கு பிறகு சத்யம் படத்திற்காக நான் சிக்ஸ் பேக் வைத்திருந்தேன். சிவக்குமார் சார் மறந்து தெரியாமல் பேசி இருக்கலாம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் விஷால்.