சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வெங்கட் பிரபு உடன் தான்… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது…

sk

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தை பிடித்த c தனது அடுத்த படத்தின் நகர்வுகளை கவனமாக செய்து வருகிறார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் பல பெரிய இயக்குனர்களை சந்தித்து படம் பண்ணலாம் என்று தானாகவே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி வந்தது. அந்த இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். ஏற்கனவே வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனும் பல படங்களில் பிஸியாக இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கும் படம் தாமதமாகவும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இருக்கும் படங்களை முடித்த உடனேயே வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் படம் பண்ண உள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கிறது.