சமந்தா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ் தெலுங்கு மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. 2010 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. 2010 இல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
2012 ஆம் ஆண்டு நான் ஈ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சமந்தா. தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமானார் சமந்தா. 2015 காலகட்டத்திற்கு பிறகு அவர் பெரிதாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சமந்தா விளம்பரங்களில் தான் நடிப்பதை பற்றிய எடுத்த முடிவை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இதுவரை 15 விளம்பரங்களில் நடிப்பதை நான் தவிர்த்து இருக்கிறேன். இந்த சோப்பு க்ரீம் போன்ற விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பாக மருத்துவர்களிடம் ஆலோசனையும் அறிவுரையும் கேட்ட பின்பே அதுபோல விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சமந்தா.