தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் உடன் இந்த திரைப்படத்தில் நடிகர் ராணா நடித்திருக்கிறாராம். ஹிந்தி திரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தும் கதைகளம் கொண்டிருந்த இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது எனவும் முந்தைய காலகட்டத்தில் ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களிலும் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடந்ததாகவும் ஆந்திராவை பிரதிபலித்து ராணா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
