சந்தீப் கிஷன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவர் வாரணமாயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். அதற்கு பிறகு 2009 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
2013 ஆம் ஆண்டு யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சந்தீப் கிஷன். அதற்கு பிறகு அவர் தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலுமே நடிக்கவில்லை. இவர் பெரும்பான்மையாக தெலுங்கு சினிமாவில் தான் நடித்து வருகிறார்.
கடந்தாண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயரும் பாராட்டுகளும் கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சந்தீப் கிஷன்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜயின் மகன் ஆன ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் முதல் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். ஒரு நேர்காணலில் அவர் பேசும்போது எல்லோரும் ஜேசன் சஞ்சயை விஜயின் மகன் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி கூறாதீர்கள். அவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற பெயர் இருக்கிறது. அவர் மிகவும் திறமையானவர். நான் நடிக்கும் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நிச்சயம் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று சற்று காட்டத்துடன் பேசியிருக்கிறார் சந்தீப் கிஷன்.