நயன்தாரா செய்த வேலையால் கொதித்து போன சுந்தர் சி… மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் நடந்த சலசலப்பு…

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து…

nayanthara

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வல்லவன், பில்லா, வில்லு, யாரடி நீ மோகினி, இது கதிர்வேலன் காதல் போன்ற முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நயன்தாரா.

2010 காலகட்டத்திற்கு பிறகு நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள், நெற்றிக்கண்,கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தையும் பெற்றார் நயன்தாரா. தற்போது பலப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் RJ பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்கவிருக்கிறார். நயன்தாரா, சுந்தர் சி மற்றும் வேல்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்து முடிந்து ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் மூக்குத்தி அம்மன் 2 படபிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவரை கடுமையாக நயன்தாரா திட்டிவிட்டாராம். இதை அறிந்த சுந்தர் சி மிகுந்த கோபத்தில் அவரை வைத்து படம் எடுக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். அதற்குப் பிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த பிரச்சனையில் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து மறுபடியும் ஷூட்டிங்கை ஆரம்பித்து இருக்கிறார்களாம். தற்போது இந்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது.