அண்ணன் சூர்யாவுடன் மோத விருப்பம் இல்லாமல் கார்த்தி எடுத்த முடிவு… இப்படி ஒரு பாசப்பிணைப்பா…?

கார்த்தி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவகுமார் மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில்…

karthi

கார்த்தி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவகுமார் மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கார்த்தி.

அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்து அனைவரையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி மெட்ராஸ், போன்ற ஹிட் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வளம் வந்தார் கார்த்தி.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான் போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கார்த்தி. இது மட்டுமல்லாமல் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். தற்போது பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் கார்த்தி.

இந்நிலையில் கார்த்தி நடித்த சர்தார் 2 திரைப்படம் வெளிவர தயாரான நிலையில் இருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அதே நிலையில் கார்த்தி நடித்த சர்தார் 2 படமும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்ற திட்டமிடப்பட்டு வருகிறதாம். ஆனால் அண்ணன் சூர்யாவுடன் மோத விருப்பம் இல்லாமல் கார்த்தி பட ரிலிஸை தள்ளி வைக்கலாம் என்று பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி நடித்த சர்தார் 2 திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணனுடன் மோதக்கூடாது என்று தான் நடித்த படத்தை தள்ளி வைத்திருக்கிறார் கார்த்தி உண்மையிலேயே தமிழ் சினிமாவில் இவ்வளவு பாசப்பிணைப்புடன் இருக்கும் அண்ணன் தம்பி இவர்கள் இருவர் தான் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவுகிறது.