என் பையன் கேட்டதுதான் மனசு உடைஞ்சிடுச்சு! ஜெயம் ரவி சொன்ன தகவல்

By Chandra R

Published:

தமிழ் சினிமாவில் ஒரு சார்மிங்கான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரவி முதல் படத்திலேயே நடிகருக்குரிய எல்லா அம்சங்களும் பெற்ற ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்தார். அதுவும் அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவும் மாறினார்.

அதனை அடுத்து மீண்டும் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் துரு துருவென பையனாக நடித்து அதுவும் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார். அதிலிருந்து பல பெண்களின் கள்வனாக மாறினார். முதல் இரு படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்க லக்கியான ஹீரோவாக பார்க்கப்பட்டார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் அப்பா ஒரு பக்கம் எடிட்டர், அவருடைய சகோதரர் இயக்குனர் என சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும் அவருடைய கடின உழைப்பால் ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றார் ஜெயம் ரவி. இந்த நிலையில் சமீபகாலமாக ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சினை சூடுபிடித்து வருகிறது.

ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதுவும் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் அவரை பற்றி பல வதந்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஜெயம் ரவி அடுத்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடாமல் இருந்தார். அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ஜெயம் ரவி ஆட்டோவில் மிகவும் எளிமையாக வந்திறங்கினார். பிரச்சினைக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியாக பிரதர் ஆடியோ வெளியீட்டு விழா அமைந்ததால் பத்திரிக்கையாளர் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

கெனிஷாவை யாரும் தப்பா பேசாதீர்கள் என்று அந்த பாடகியை பற்றி கூறினார் ஜெயம் ரவி. மேலும் மேடையில் பேசும் போது ஒரு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது ஜெயம் ரவிக்கு ஒரு ஸ்டெப் வரவில்லையாம். உடனே ஜெயம் ரவியுடன் வந்த அவருடைய மகன் ஆரவ் ‘ஏன்ப்பா உனக்கு வயசாயிடுச்சா’ என கேட்டாராம்.

இதை கேட்டதும் ஜெயம் ரவிக்கு ஷேம் ஆகி விட்டதாம். அதன் பிறகு நல்ல முறையில் பிராக்டிஸ் செய்து மறு நாள் அந்த ஸ்டெப்பை போட்டேன் என ஜெயம் ரவி கூறினார்.

மேலும் உங்களுக்காக...