அவங்களுக்காக தான் இந்த முடிவை எடுக்குறேன்.. மனைவி ஆர்த்தியுடனான உறவை முறித்த ஜெயம் ரவி.. காரணம் இதுவா..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் பலரும் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து முடிவை அறிவித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வந்த வண்ணம் உள்ளது. அப்படி இருக்கையில் தான் தற்போது முன்னணி நடிகரான ஜெயம் ரவியும் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிவது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காலடி எடுத்து வைத்த ஜெயம் ரவி நிறைய சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், தில்லாலங்கடி என ஜெயம் ரவி நடிப்பில் உருவான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ள நிலையில், இவர்களின் திருமண வாழ்க்கையின் சிறப்பாக தான் இருந்து வந்தது.

சமீபத்தில் கூட ஜெயம் ரவிக்காக நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் அவரது மனைவி ஆர்த்தி கலந்து கொண்டு நிறைய காதல் தருணங்களையும் பகிர்ந்திருந்தார். அப்படி இருக்கையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக ஒரு சர்ச்சையான விஷயமும் வெளியானது.

இதனால் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விரைவில் பிரிவார்கள் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்த அதற்கு மத்தியில் தான் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷும், அவரது மனைவி சைந்தவியும் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் தாங்களும் பிரிந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ஜெயம் ரவி, தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தனது விவாகரத்து பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிக கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
jayam ravi aarti divorce

இந்த முடிவை எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார் ஜெயம் ரவி. இந்த நேரத்தில் தனக்கான தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் படி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தனது சொந்த முடிவு என்றும் அது தனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி. திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பது தன்னுடைய கடமை என்றும் அதே ஜெயம் ரவியாக எப்போதும் தனக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் இந்த முடிவு தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.