தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.
2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளியாகி இருக்கிறது.
தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கிறார் சிம்பு. இந்நிலையில் சிம்புவின் 49 வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த திரைப்படம் ஒரு காங்ஸ்டர் திரைப்படமாக வடசென்னை படத்தின் சாயலில் உருவாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் டிராப் ஆகும் நிலைமைக்கு சென்று விட்டது என்ற தகவல் வெளியானது. அதற்கு காரணம் சிம்பு தான் என்ற புதிய தகவல் என்று வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், சிம்பு இந்த படத்திற்காக 10 கோடி மட்டும் அட்வான்ஸ் பெற்றுவிட்டு மீதி சம்பளத்தை பிராஃபிட் ஷேர் என்ற முறையில் பெற்றுக் கொள்கிறேன் என்று முதலில் கூறினாராம். தற்போது அதெல்லாம் வேண்டாம் எனக்கு முதலில் 30 கோடி அட்வான்ஸாக கொடுங்கள் என்று கேட்டிருக்கிறாராம். இதனால் படத்தின் பட்ஜெட் எகிரி விடவே தயாரிப்பாளர் இந்த படத்தை எப்படி முடிப்பது என்று யோசனையில் ஆழ்ந்து விட்டாராம். சிம்புவும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடமும் இந்த படத்தை தயாரிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறாராம். அதனால் சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த படம் டிராப்பாகும் நிலைமைக்கு சென்றதற்கு காரணம் சிம்பு தான். அவரின் சம்பளப் பிரச்சினை தான் காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவுகிறது.
