சூர்யா 45 படத்தில் இணையும் அடுத்த இரண்டு நடிகைகள்.. ஃபேன் பேஸ் அதிகமாச்சே இவங்களுக்கு

By Chandra R

Published:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே பெருமளவு எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தப் படம் பல மொழிகளில் தயாராகி ஒரு பேன் இந்திய படமாக உருவாகியிருக்கிறது.

சூர்யாவின் கெரியரிலேயே கங்குவா திரைப்படம்தான் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாக தயாராகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தான் சூர்யா 45 படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில் சூர்யா 45 படத்தில் ஏற்கனவே காஷ்மிரா பர்தேசி ஹீரோயினாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இவர் சிவப்பு மஞ்சள் பச்சை, பிடி சார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்டரை பார்க்கும் போது ஏதோ கிராமத்து சாயலில் நடக்கும் கதையாக இருப்பதை போல் தெரிகிறது.

ஆனால் படத்திற்கு ஹிண்ட் என்ற தலைப்பை வைக்கப்போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் சூர்யா 45 படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் களமிறங்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் ஒருவர் மிருனாள் தாகூர் மற்றும் ருக்மணி வசந்த். இதில் மிருனாள் தாகூர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இவருக்கு என தனி ஃபேன் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். இவர் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கக் கூடியவர். நடிப்பிலும் கைதேர்ந்தவர் மிருனாள் தாகூர்.