Bigg Boss Tamil Season 8 Day 12: படுதோல்வி அடைந்த ஆண்கள் அணி… கெத்து காட்டி நாமினேஷனில் இருந்து தப்பித்த பெண்கள் அணி!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 Day 11 இல் சுவாரசியமாகவே சென்றது. முதலில் பிக் பாஸ் பிபி அவார்ட் ஷோ வை நடத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி ஒவ்வொருவருக்கும் ஆடியன்ஸ், டம்மி பாபா, சொம்பு தூக்கி போன்ற பல பட்டங்கள் கொடுக்கப்பட்டது. பலர்க்கு அதில் அதிருப்தி ஏற்பட்டது.

bigg boss

அதற்கு அடுத்ததாக ஆண்கள் கெத்தா பெண்கள் கெத்தா போட்டியில் இறுதி கட்ட மெமரி டாஸ்க் பிக் பாஸ் கொடுத்தார். இந்த மெமரி டாஸ்க்கில் 15 பொருட்களை ஸ்கிரீனில் பார்த்து அதை வரிசைப்படி ஆக்டிவிட்டி ஏரியாவில் அடுக்க வேண்டும். அதன்படி பெண்கள் அணியில் இருந்து மூன்று பேர் ஆண்கள் அணிந்து மூன்று பேர் சென்று இந்த டாஸ்கை முடித்தார்கள்.

இறுதியில் அனைத்து மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது பெண்கள் அணி ரு பாய்ண்டில் வென்று பெண்கள் அணி தான் கெத்து என்று காட்டிவிட்டது. ஆண்கள் அணியில் இந்த மைண்ட் டாஸ்க் முத்துக்குமார் அபாரமாக விளையாடினார். 15 பொருட்களையும் ஞாபகப்படுத்தி கரெக்டா வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யமடைய வைத்து விட்டார்.

பெண்கள் தான் கெத்து என்று நிரூபித்ததால் அவர்கள் அணியில் இருந்து ஒருவரை நாமினேஷனில் இருந்து தப்பிக்க செய்யலாம் என்று பிக் பாஸ் செய்தார். அதன்படி பெண்கள் அனைவரும் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். நாமினேஷனில் இருந்த ஜாக்குலின் சௌந்தர்யா, சாச்சனா தர்ஷா நான்கு பேரும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.

ஜாக்குலின் நான் ரொம்ப டேஞ்சரஸ் சோன்ல இருக்கேன் அப்படின்னு சொல்லி சொன்னார். சாட்சனா நான் ஏற்கனவே வெளியே போயிட்டு வந்துட்டேன் மறுபடியும் நான் அந்த இடத்துல நிக்க விரும்பல என்று கூறினார். சௌந்தர்யா நான் இன்னும் என்னை பத்தி வெளிய காட்ட வேண்டியது நிறைய இருக்கு என்று கூறினார்.

அடுத்ததாக தர்ஷா டீசன்டாக விலகிக் கொண்டார். நான் இந்த வாரம் கேர்ள்ஸ் டீம் ல இல்ல எல்லாமே உங்களுடைய effort தான் அதனால எனக்கு வேண்டாம் அப்படின்னு சொல்லி விட்டார். இறுதியில் பெண்கள் அணி அனைவரும் ஒன்று சேர்ந்து ஜாக்குலினை காப்பாற்றி விட்டார்கள்.

அடுத்ததாக யார் சிறந்தது இந்த வாரத்தில் எல்லாவற்றிலும் பங்கேற்றது போன்ற நிகழ்வு நடந்தது. இதில் ஒருமனதாக ரஞ்சித்தையும் தர்ஷிகாவையும் தேர்ந்தெடுத்தார்கள். அதில் பெண்களில் பவித்ராவுக்கு சற்று அதிருப்தி ஏற்பட்டு அப்செட் ஆகிவிட்டார்.

bigg boss

ஏனென்றால் அவர் இந்த வாரம் கேப்டன் டாஸ்கிலும் மற்ற டாஸ்க்கிலும் நல்ல பங்களிப்பை கொடுத்திருந்தார். அதனால் நம்முடைய பெயரை நான் ஒருவர் கூட சொல்லவில்லை என்று அவர் மிகவும் அப்செட் ஆகிவிட்டார். அதேபோல் தர்ஷிகா ஆர் ஜே ஆனந்தி ஆகியோரும் ஒப்புக்கொண்டனர் எப்படி பவித்ராவை சொல்லாமல் மறந்தோம் என்று சமாதானப்படுத்துகிறார்கள்.

ஆனாலும் அவர்கள் சமாதானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை அடுத்ததாக வீகென்ட் எபிசோடு வர இருக்கிறது விஜய் சேதுபதி ஏற்கனவே கடந்த வாரமே அலற விட்டு விட்டார். இந்த வாரமும் அதே போல் அவரது எபிசோடுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.