பிக்பாஸ் 8 : அன்ஸிதாவை பத்தி பேசி ரசிகர்களிடம் சிக்கிய அர்னவ்.. அதுவும் இந்த டாபிக்ல தான் பேசி மாட்டணுமா..

By Ajith V

Published:

தமிழில் இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ள எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் தான் அதிகமாக இருந்தது.

ஆனால் முதல் எபிசோடிலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களிடமும் மிகச் சிறப்பாக உரையாடி கவனத்தை ர்த்திருந்தார். வார இறுதி நாட்களில் அவர் வரும் எபிசோடுகளும் நிச்சயம் களைகட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம் என பிரிக்கப்பட்டு வீடுகளும் அதற்கேற்ப யாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் களமிறங்கிய போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உருவாக தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில், இரண்டு பேர் களமிறங்கியது ரசிகர்ள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கிடையேயான உறவு முறிந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் நேரடியாக ஊடகத்தை சந்தித்து பல பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டு இருந்தும் அதிகம் ட்ரெண்டிங்கில் இருந்தனர். அப்போது தனது கணவர் அர்னவ் அவருடன் செல்லம்மா சீரியலில் இணைந்து நடித்த அன்ஸிதாவுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை ஒதுக்கி விட்டதாகவும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

இதில் உண்மை என்ன என்பது சரிவர தெரியால் இருந்து வந்த நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்னவ் மற்றும் ன்சிதா ஆகிய இருவருமே போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். பல நாட்களாக மனைவியை விட்டு தவறான உறவில் இருந்து வருபவரை ப்படி ஒரே வீட்டில் அனுமதித்தீர்கள் என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதில் மற்றொரு சிறப்பம்சமாக அர்னவ் உள்ளே வந்ததும் அன்ஸிதாவை சர்ப்ரைஸாக பார்த்தது போல் அவர் ரியாக்ட் செய்திருந்ததை தெரியாதது போல ஏன் இப்படி நாடகம் போடுகிறீர்கள் என்றெல்லாம் அர்னவுக்கு எதிராவும் பேசி வருகின்றனர்.

அப்படி இருக்கையில் போட்டியாளரான பவித்ராவிடம் அர்னவ் சொன்ன விஷயம் இன்னும் சர்ச்சையை தான் உருவாக்கியுள்ளது. சமையலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது பவித்ராவிடம் பேசும் அர்னவ், “அன்சிதா நன்றாக சமைப்பார். அவள் 10 பேருக்கு கூட சமைப்பார்” என கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த அன்ஸிதா எதுவுமே சமைக்க தெரியாதது போல காண்பித்திருந்த நிலையில் அவருக்கு சமையல் தெரியும் என அர்னவ் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பக்கம் விமர்சனத்தை சந்திக்க, இன்னொரு புறம் ஒரே சீரியலில் நடித்திருந்த காரணத்தினால் அவரின் சமையல் பற்றி தெரிந்து கொள்ள முடியுமா என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.