வீர தீர சூரன் படம் ஆரம்பிக்கும் போதே இந்த விஷயத்தை முடிவு பண்ணிட்டோம்… நடிகர் விக்ரம் பகிர்வு…

விக்ரம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, உல்லாசம்…

vikram

விக்ரம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, உல்லாசம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் விக்ரம். 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விக்ரம்.

தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா என 2000 களின் ஆரம்பகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விக்ரம்.

2010 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் விக்ரம். சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றவர். தற்போது இவர் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான நேர்காணலில் கலந்து கொண்ட விக்ரம் படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

விக்ரம் கூறியது என்னவென்றால், இந்த படத்தை ஆரம்பித்த உடனேயே நல்ல நல்ல Performer ஆன நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம். ஏனென்றால் இது மிகவும் Raw ஆன ஒரு கதை. அதற்காக எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் போன்றோர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினோம். அவர்கள் எல்லாம் Best Performers என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் விக்ரம்.