விக்ரம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து தந்துவிட்டேன் என்னை, உல்லாசம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் விக்ரம். 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விக்ரம்.
தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா என 2000 களின் ஆரம்பகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விக்ரம்.
2010 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் விக்ரம். சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றவர். தற்போது இவர் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரமை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் வீர தீர சூரன் படத்திற்காக அவர் 30 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். இப்போது சம்பளத்தை உயர்த்தி அடுத்து நடிக்கப் போகும் படங்களில் 50 கோடி வாங்கப் போவதாக கூறியிருக்கிறாராம் விக்ரம். இதனால் தயாரிப்பாளர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.