தமிழ் சினிமால இந்த நடிகர் கூட தான் நடிக்கணும் ஆசை… மனம் திறந்த நடிகர் பிரித்விராஜ்…

பிரித்விராஜ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது தந்தை சுகுமாரன் மற்றும் தாயார் மல்லிகா இருவரும் நடிகர்கள்…

prithviraj

பிரித்விராஜ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது தந்தை சுகுமாரன் மற்றும் தாயார் மல்லிகா இருவரும் நடிகர்கள் ஆவர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பிரித்விராஜ்க்கு கிடைத்தது.

2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான பிரித்விராஜ் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு பாரிஜாதம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் பிரித்விராஜ்.

பின்னர் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரித்விராஜ்.

தற்போது மோகன்லால் உடன் இணைந்து எம்புரான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் பிரித்திவிராஜ். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்விராஜ் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் பிரித்விராஜ்.