தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.
தற்போது அஜித்குமார் பெல்ஜியமில் நடந்து வரும் கார் ரேசிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அங்கு அஜித்குமாரை காண சென்ற ரசிகை உருக்கமாக ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், நாங்கள் அஜித் சாரின் கார் ரேசிங்கை பார்க்க வந்தோம் பார்த்துவிட்டு அவருடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு ஆசை இருந்தது.ஆனால் அஜித்குமார் சார் ஒரு சாதாரண மனிதரைப் போல் ரேசிங் சென்று விட்டு வந்து அனைவரிடமும் சகஜமாக பேசினார். எல்லோரும் சாப்பிட்டு விட்டு வாருங்கள் பொறுமையாக போட்டோ எடுக்கலாம் என்று எங்களை சாப்பிட சொல்லிவிட்டு பின்னர் அவர் வந்து எல்லோருடனும் அன்பாக பேசி பொறுமையாக அனைவருடனும் போட்டோ எடுத்து கொண்டார். அவ்வளவு எளிமையாக இருந்தார். இவ்வளவு மிகப்பெரிய இடத்தில் இருந்தும் எவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதோடு எங்களுடன் அன்போடு பேசினார் என்று அந்த வீடியோவை அந்த ரசிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.