தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு 33 காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிக்கு நேரடி நியமனமாக வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை படி பல்வேறு கல்லூரி மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்படி தமிழகத்தில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை முதல் (ஜூன் 6-ம் தேதி முதல்) விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 5.
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
