இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் எப்படி

By Staff

Published:

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான படம் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படம்.

ffe144e9f39e8ef6dac35deb831112e2

கதைப்படி சிறுவயதிலேயே தனது தாய் வேறொருவருடன் சென்று விடுவதால் சந்தேக புத்தியும் கோபமும் ஹீரோவுக்கு வருகிற மாதிரி கதை.

ரஞ்சித் ஜெயக்கொடியின் கதை, திரைக்கதை , வசனம் மற்றும் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மா.கா.பா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன் மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

இவருக்கும் நாயகியான ஷில்பாவிற்கும் இடையே காதல் மலர்கிறது. தன்னனுடைய அம்மாவை போல காதலியும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற எண்ணத்திலேயே ஹரிஷ் கல்யாண் எதற்கெடுத்தாலும் கோபத்தை காட்டிகிறார்.

முதலில் ஹரிஷின் முரட்டுத்தனத்தை பிடித்து காதலில் விழுந்த ஷில்பா, பின்னர் அதே முரட்டுத்தனத்தின் காரணமாக அவரை விட்டு பிரிந்து செல்கிறார். ஆனால் என்ன நடந்தாலும் தனது காதலியை பிரிந்துவிடக் கூடாது என்று தேடி துரத்துகிறார் ஹரிஷ். இறுதியில் இவர்களில் காதல் என்ன தான் ஆகிறது என்பது தான் கதை.

படம் பார்த்தவர்கள் விமர்சனத்தையும் நம்முடைய அளவீட்டையும் வைத்து பார்க்கும்போது ஒரு முறை பார்க்கலாம் ரகம் இப்படம்.

Leave a Comment