அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா என்று சொல்வதற்கு 18 நிமிட வீடியோவா? இதுக்கு ரஜினியே பரவாயில்லை.. அம்மா சொன்னா தான் அரசியலுக்கு வருவாராம்.. ரசிகர்கள் ஓகே சொன்னாதா அரசியலுக்கு வருவாராம்.. அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு அரசியலுக்கு நீங்க வரவேண்டாம்..அரசியலுக்கு வர்றதா இருந்தா வாங்க.. வரலைன்னா வரலைன்னு சொல்லிருங்க.. ரஜினி மாதிரி இழுத்துகிட்டே போக வேண்டாம்… ராகவா லாரன்ஸ் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..

பிரபல நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகை குறித்து விளக்கம் அளித்து சமூக வலைத்தளங்களில் 18 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே”…

ragawa lawrence

பிரபல நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகை குறித்து விளக்கம் அளித்து சமூக வலைத்தளங்களில் 18 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற தத்துவக் கதையுடன் தொடங்கும் இந்த வீடியோவில், தான் அரசியலுக்கு வருவதற்கான பின்னணி மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் குடும்பச் சூழல் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். இருப்பினும், இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதைத் தீர்க்கமாகக் கூறாமல் மழுப்புவதாக நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்களும் கமெண்ட்ஸ்களும் குவியத் தொடங்கியுள்ளன.

அரசியல் மீதான தனது ஆர்வம் குறித்துப் பேசிய ராகவா லாரன்ஸ், தான் தொடர்ந்து பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வந்ததாகவும், தமிழகத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி ஆதரவு அளித்ததே தனது அரசியல் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் செய்யும் நல்ல வேலைகளுக்கான பலனைத் தேடி அலைந்து ஜால்ரா அடிக்கத் தேவையில்லை என்றும், உண்மையாக உழைத்தால் அதற்கான பலனைக் கடவுள் கண்டிப்பான முறையில் கொடுப்பார் என்றும் ஒரு குட்டிக்கதையின் மூலமாக அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த சமயத்தில், தானும் அவருடன் இணைந்து அரசியலில் களம் இறங்கத் திட்டமிட்டிருந்ததாக லாரன்ஸ் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அரசியலில் வெற்றி பெற்றால் இன்னும் பெரிய அளவில் அறக்கட்டளைகளை தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவலாம் என்று தனது தம்பிகள் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்தை விமர்சித்துப் பேசியபோது தான் கோபமடைந்ததாகவும், ஆனால் ரஜினி தன்னை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார் என்றும் அவர் அந்தப் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தனது அரசியல் ஆசை குறித்துத் தனது தாயாரிடம் பேசியபோது, அவர் அதற்குச் சற்றும் உடன்படவில்லை என்று லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அரசியல் ஒரு சாக்கடை என்று கூறி, லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதை அவரது அம்மா கடுமையாக எதிர்த்ததுடன், இரண்டு மூன்று நாட்கள் அவரிடம் பேசாமலும் இருந்துள்ளார். இந்தச் சூழலில் கொரோனா பேரிடர் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாடும் முடங்கியதும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டுத் தான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகவும், மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என்று ரஜினி தன்னிடம் வருத்தப்பட்டதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தீவிரமாகப் பயணிக்கத் தொடங்கியதும், தனது நண்பர் விஜய்யின் அரசியல் வருகைக்காகத் தனது அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு வேலைகளைத் தான் செய்யத் தொடங்கியதாக லாரன்ஸ் விவரித்துள்ளார். விஜய்யின் கடின உழைப்பையும், சமீபத்திய தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களையும் கவனித்த தனது தாயார், “விஜய் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்” என்று கூறி, இறுதியாக ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதற்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். தனது தாயின் சம்மதம் கிடைத்துவிட்டதால், அடுத்ததாகத் தன் தாய்க்கு நிகராகக் கருதும் ரசிகர்களின் கருத்தை அறிய விரும்புவதாக அவர் அந்த வீடியோவில் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

ராகவா லாரன்ஸின் இந்த 18 நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் கடுமையான கமெண்ட்ஸ்கள் வரத் தொடங்கியுள்ளன. “அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்று சொல்வதற்கு இவ்வளவு பெரிய வீடியோவா? இதற்கு ரஜினியே எவ்வளவோ பரவாயில்லை” என்று பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“அம்மா சொன்னால்தான் வருவாராம், ரசிகர்கள் ஓகே சொன்னால்தான் வருவாராம்; அப்படி ஒன்றும் கஷ்டப்பட்டு நீங்கள் அரசியலுக்கு வரத் தேவையில்லை, வருவதாக இருந்தால் நேரடியாக வாருங்கள், இல்லையென்றால் இல்லை என்று சொல்லிவிடுங்கள், ரஜினி மாதிரி இழுத்தடித்துக் கொண்டே போக வேண்டாம்” என்று நெட்டிசன்கள் லாரன்ஸின் முடிவற்ற இந்த விளக்கத்தை ஓப்பனாக விமர்சித்து வருகின்றனர்.