50வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்ட சூர்யா… என்னனு தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க…

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர்…

surya

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர் கார்த்திக் மற்றும் இவரது மனைவி ஜோதிகா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சூர்யா.

இவரை மேலும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று இரண்டு மூன்று என்ற மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. 2015 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிதாக வணீக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இறுதியாக இவர் நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை பெற்றது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. இதில் Retro திரைப்படம் முடிவடைந்து ரிலீஸானது. ஆனால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கி சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யா தனது 50 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த பிறந்த நாளை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் தற்போது ஜோதிகாவுடன் சூர்யா மும்பையில் செட்டிலாகிவிட்டார். அதனால் மும்பையில் இருக்கும் நண்பர்களுக்காகவும் அவர் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதால் அங்கு இருக்கும் நண்பர்களுக்காகவும் கோவாவில் பிரைவேட்டாக வருகிற 19, 20 சனி ஞாயிற்றுக்கிழமையில் பார்ட்டி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னையில் இருக்கும் நண்பர்களுக்காக அவர் புதிதாக வாங்கி இருக்கும் ஈசிஆர் பங்களாவிலும் பிரைவேட் பார்ட்டி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது ஐம்பதாவது பிறந்தநாளை பார்த்து பார்த்து பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் சூர்யா.